sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கட்டணம் இல்லா பஸ்களை நிறுத்துவது இல்லை என புகார்

/

கட்டணம் இல்லா பஸ்களை நிறுத்துவது இல்லை என புகார்

கட்டணம் இல்லா பஸ்களை நிறுத்துவது இல்லை என புகார்

கட்டணம் இல்லா பஸ்களை நிறுத்துவது இல்லை என புகார்


ADDED : ஜூன் 10, 2024 01:50 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, கட்டணம் இல்லாத அரசு டவுன் பஸ்களில் பெண்களை, ஏற்றி செல்வது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கடந்த, 2021 மே மாதம், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மாநிலம் முழுதும் அரசு டவுன் பஸ்களில், பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதற்காக, இலவச பஸ் டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கரூரில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களிலும், பரமத்தி வேலுாரில் இருந்து ஈரோடு மாவட்டம், கொடுமுடி வரை செல்லும் அரசு டவுன் பஸ்களிலும், வேலைக்காக பெண்கள் சென்று வருகின்றனர்.

ஆனால், குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்புகளில் குறைந்தளவில் பெண்கள் நின்றால், டவுன் பஸ்களை டிரைவர்கள் நிறுத்தாமல் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில், பெண்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, அனைத்து பஸ் ஸ்டாப்புகளிலும் அரசு டவுன் பஸ்களை நிறுத்தி, பெண்களை அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us