sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஒரே நேரத்தில் குவிந்த காங்.,-பா.ஜ.,வினர்:கரூர் அரசு மருத்துவமனையில் நெரிசல்

/

ஒரே நேரத்தில் குவிந்த காங்.,-பா.ஜ.,வினர்:கரூர் அரசு மருத்துவமனையில் நெரிசல்

ஒரே நேரத்தில் குவிந்த காங்.,-பா.ஜ.,வினர்:கரூர் அரசு மருத்துவமனையில் நெரிசல்

ஒரே நேரத்தில் குவிந்த காங்.,-பா.ஜ.,வினர்:கரூர் அரசு மருத்துவமனையில் நெரிசல்


ADDED : அக் 01, 2025 02:11 AM

Google News

ADDED : அக் 01, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று ஒரே நேரத்தில் காங்., - பா.ஜ., குழுவினர் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ம் தேதி நடந்த த.வெ.க., பொதுக்கூட்டத்தில் சிக்கி, மூச்சுத் திணறி, 41 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் நாள்தோறும் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் அகில இந்திய காங்., கட்சி பொதுச்செயலர் வேணு கோபால் தலைமையில் ஒரு குழுவும், பா.ஜ., எம்.பி.,ேஹமமாலினி தலைமையிலான ஒரு குழுவும், ஒரே நேரத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தனர்.

அப்போது அவர்களுடன், 100க்கும் மேற்பட்ட கார்களில் கட்சியினர் வந்தனர். இதனால், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை, பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஒழுங்குப்படுத்தினர். மேலும், மருத்துவமனைக்கு வந்த, உள்புற நோயாளிகளின் உறவினர்கள், வெளிப்புற நோயாளிகள் அவதிப்பட்டனர்.






      Dinamalar
      Follow us