sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீட்டுமனை பட்டா கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் மனு

/

வீட்டுமனை பட்டா கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் மனு


ADDED : ஜூன் 06, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :வீட்டுமனை பட்டா கேட்டு, கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சரவணன் தலைமையில், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பிரபாகரனிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

கிருஷ்ணராயபுரம் அருகில் கள்ளப்பள்ளி, கோரகுத்தி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், கட்டுமானம் மற்றும் விவசாய கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்.

குடியிருப்பதற்கு போதிய வீடுகள் இல்லாததால், ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். குடியிருப்பதற்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி, பல ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். இதனிடையே, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வருவாய் துறை அதிகாரிகள், எங்களிடம் வீடு இல்லாதது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இன்று வரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணியன், மா.கம்யூ., கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us