/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை
/
மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : மார் 10, 2026 04:32 AM

கரூர்: கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., சார்பில், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோ-சனை கூட்டம் நடந்தது.
அதில், நாளை திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது, பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கிய அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பது, கரூர், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டி-யிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற, களப்பணி-யாற்றுவது உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட தலைவர் பிரபாகரன், அமைப்பு செயலாளர் குணசீலன், துணை செயலாளர் சதீஷ், நகர செயலாளர் ராக்கி முருகேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பசுபதி உள்பட பலர்
பங்கேற்றனர்.

