ADDED : அக் 09, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நடப்பு மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கேரளா மாநிலம் மற்றும் தென் தமிழகத்தின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை வரை, கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 4.40, க.பரமத்தி, 7.20, குளித்தலை, 1.20, கிருஷ்ணராயபுரம், 8, மாயனுார், 6 மி.மீ., ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 2.23 மி.மீ., மழை பதிவானது.