/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் குப்பை கொட்டும் இடமாக மாற்றம்
/
கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் குப்பை கொட்டும் இடமாக மாற்றம்
கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் குப்பை கொட்டும் இடமாக மாற்றம்
கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் குப்பை கொட்டும் இடமாக மாற்றம்
ADDED : மார் 03, 2024 01:22 AM
கரூர்;கைவிடப்பட்ட கிணறுகளை மூடாததால், கழிவு கொட்டும் இடமாக மாறி வருகிறது.
கரூர் மாநகராட்சியை ஒட்டி, பல பகுதிகளில் விவசாய பணிகள் நடந்து வந்தது. அங்கு, கிணறுகள் மூலம் பாசனம் செய்து வந்தனர். தற்போது நகர மயமாதலால் வயல்கள் பெரும்பாலும் பிளாட் போட்டு விற்கப்பட்டுள்ளது. இங்கு, ஏராளமான குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இங்கு கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் பல உள்ளன. பாதுகாப்பற்ற முறையில் கிணறு திறந்து கிடக்கிறது.
கிணற்றை மூடாததால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடும் போது தவறி விழும் அபாயம் இருக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. நீண்டகாலமாக கிணறுகள் திறந்த நிலையிலேயே மூடப்படாமல் காணப்படுகிறது. இதில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. உள்ளாட்சி நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

