sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் சோளம் அறுவடை நிறைவு சேனை கிழங்கு சாகுபடி பணி விறுவிறு

/

கரூரில் சோளம் அறுவடை நிறைவு சேனை கிழங்கு சாகுபடி பணி விறுவிறு

கரூரில் சோளம் அறுவடை நிறைவு சேனை கிழங்கு சாகுபடி பணி விறுவிறு

கரூரில் சோளம் அறுவடை நிறைவு சேனை கிழங்கு சாகுபடி பணி விறுவிறு

1


ADDED : ஜூலை 20, 2025 05:34 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:34 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், பாசன பகுதிகளில் சோளம் அறுவடை நிறைவடைந்த நிலையில், சேனை கிழங்கு பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடு-பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, நெல், மஞ்சள் சாகுபடிக்காக ஆண்டு-தோறும், ஆடி மாத இறுதியில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், அமராவதி அணையின் நீர்மட்டம், 88 அடியாக உள்ளது. இதனால், அமராவதி ஆற்றில் முன்கூட்டியே வினாடிக்கு, 396 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றின் பாசன பகுதிகளான கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டாரங்களில் விவசாயிகள், மழையை நம்பி சோளம் பயிரிட்-டனர். தற்போது, சோளம் முற்றிய நிலையில் அறுவடை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

விவசாயிகள் கூறியதாவது: மழையை நம்பி பயிரிடப்பட்ட சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அமராவதி அணையின் நீர்மட்டம், 90 அடியை விரைவில் எட்டி விடும். அப்போது, பாசனத்துக்காக அமராவதி ஆற்றில் இருந்து, கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும்.

சேனை கிழங்கு சாகுபடிக்காக, சோளம் அறுவடையை தீவிரப்ப-டுத்தியுள்ளோம். சில விவசாயிகள் மஞ்சள் பயிரிடுடன், சேனை கிழங்கை ஊடு பயிராகவும் சாகுபடி செய்வர்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us