sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நடைபாதை ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்

/

நடைபாதை ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்

நடைபாதை ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்

நடைபாதை ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்


ADDED : ஜூலை 20, 2025 05:31 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகரின் முக்கிய சாலையில் உள்ள, நடைபாதையில் உள்ள, ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகா-ரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், பொதுமக்கள் நடைபாதையை, பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

கரூர் நகரின், மைய பகுதியில் செயல்படும், பஸ் ஸ்டாண்டில் மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ் நிறுத்தப்படும் இடத்தில் இருந்த, வணிக வளாக கட்டிடம் சில மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது.இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பொதுமக்கள் டவுன் பஸ் மற்றும் சேலம் செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள, வணிக வளாக கட்டிட நடைபாதையில் ஒதுங்கி நிற்கின்-றனர்.

இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில் உள்ள, ஆக்கிர-மிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. அதே போல், கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜவஹர் பஜார், மனோகரா கார்னர், கோவை சாலை, உழவர் சந்தை சாலை, தின்னப்பா கார்னர் சாலையில், நடைபாதையில் பல்வேறு வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளையும், மாநக-ராட்சி அதிகாரி கள் அகற்றுவது இல்லை.

குறிப்பாக, முக்கிய சாலைகளின் நடைபாதையில், பல வணிக நிறுவனங்கள் சார்பில் ெஷட் மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. விளம்பர போர்டுகளும், நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ளன.

அதை, கரூர் மாநகராட்சி அதிகாரிகள், அகற்றாமல் மெத்தன-மாக உள்ளனர். இதனால், கரூர் நகரில் அடிக்கடி கடும் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களால், நடைபாதையில் நடந்து கூட செல்ல முடியவில்லை.

எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்-புகள், நகரில் ஜவஹர் பஜார், மனோகரா கார்னர், கோவை சாலையில் உள்ள, நடைபாதையில் உள்ள, ஆக்கிரமிப்புக-ளையும், மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us