sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வில்லுக்காரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா

/

வில்லுக்காரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா

வில்லுக்காரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா

வில்லுக்காரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா


ADDED : ஜூன் 26, 2025 01:45 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, சின்னியம்பாளையம் பஞ்சாயத்து, வில்லுக்காரன்பட்டியில், கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் சார்பில், நேற்று முன்தினம் மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது.

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல் என, 14 ஊர் மந்தை நாயக்கர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு, மாடு மாலை தாண்டுவதற்கான நிகழ்ச்சிகள் நடந்தன. மொத்தம், 180 மாடுகள் கலந்து கொண்டன. 2 கி.மீ., தொலைவில் இருந்து ஓட்டி விடப்பட்ட மாடுகள் எல்லை கோட்டை நோக்கி ஓடி வந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், சேமங்கலத்தை சேர்ந்த ஐயா சாமி மந்தை மாடு முதலாவதாகவும், திருச்சி மாவட்டம், ராஜ கோடங்கிபட்டியை சேர்ந்த ராஜா மந்தை மாடு இரண்டாவதாகவும், இனுங்கூர் சுக்காம்பட்டியை சேர்ந்த விரிகஜல் மந்தை மாடு மூன்றாவதாகவும் வந்து வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் மந்தைதாரர்களுக்கு எலுமிச்சை கனி பரிசாக வழங்கப்பட்டது.

ஏராளமானோர் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.






      Dinamalar
      Follow us