/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாயில் விரிசல் வீணாகி செல்லும் தண்ணீர்
/
குடிநீர் குழாயில் விரிசல் வீணாகி செல்லும் தண்ணீர்
ADDED : செப் 28, 2024 01:07 AM
குடிநீர் குழாயில் விரிசல்
வீணாகி செல்லும் தண்ணீர்
கிருஷ்ணராயபுரம், செப். 28-
மேட்டு மகாதானபுரம் பகுதியில் இருந்து, பழையஜெயங்கொண்டம் மலையாளி கோவில் செல்லும் சாலையில் உள்ள குழாயில், விரிசல் ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டு மகாதானபுரம் பகுதியில் இருந்து, பழையஜெயங்கொண்டம் மலையாளி கோவில் சாலை வழியாக, காவிரி நீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தண்ணீர் டவுன் பஞ்சாயத்து வார்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மேட்டு மகாதானபுரம் தொட்டியப்பட்டி பிரிவு சாலை அருகில், குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணானது. மேலும் சாலையோர இடங்களில் தேங்கி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விரிசல் அடைந்த குழாயை, சரி செய்ய டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.