/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்ரேட்டர் பலி
/
அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்ரேட்டர் பலி
ADDED : மார் 25, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் : சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, குரால் நத்தம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 31; கிரேன் ஆப்பரேட்டரான இவர், வெள்ளகோவிலில் தனியார் கிரேன் வாகனத்தில் பணிபுரிந்தார்.
வெள்ளகோவிலில் கரூர்-கோவை சாலையில், நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றபோது, கரூர் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

