/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே ரயில் பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்
/
கரூர் அருகே ரயில் பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்
கரூர் அருகே ரயில் பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்
கரூர் அருகே ரயில் பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்
ADDED : ஜூலை 28, 2025 08:02 AM
கரூர்: கரூர் அருகே, ரயில்வே பாலத்தில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, அரிக்கா-ரன்பாளையத்தில், ஈரோடு ரயில்வே வழித்-தடத்தில், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் வழியாக, நாள்தோறும் ஆயிரக்-கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்-டங்களில் இருந்து, கரூர் செல்லும் உயர்மட்ட ரயில்வே பாலத்தில் தரைத்தளம் சேதமடைந்-துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். குறிப்பாக, ரயில்வே பாலத்தில் கான்கிரீட் கம்பிகள் நீட்டியபடி, நடை-பாதையில் உள்ள சிலாப் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.
இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நடைபா-தையில் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அரிக்காரன்-பாளையம் ரயில்வே பாலத்தில், சேதமடைந்-துள்ள தரைத்தளத்தை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.