/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் அவதி
/
சேதமடைந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 06, 2025 01:54 AM
கரூர்: கரூர் மாநகராட்சி, திருமாநிலையூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு பள்ளிகள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்-ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், போக்குவ-ரத்து பணிமனை அருகே, சாலையின் குறுக்கே, சாக்கடை கால்-வாயின் மேல் பகுதியில், புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டது.
தற்போது, சிறுபாலத்தின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குச்சியை வைத்து கட்டியுள்-ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். டூவீலர்களில் சென்ற சிலர், கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், கரூர், திருமாநி-லையூர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே, சேதமடைந்த நிலையில் உள்ள, சிறுபாலத்தின் மேல் பகுதியை சீரமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவ-சியம்.

