/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலெக்டர் அலுவலகம் எதிரே சேதமான நிழற்கூடம்
/
கலெக்டர் அலுவலகம் எதிரே சேதமான நிழற்கூடம்
ADDED : நவ 14, 2025 01:33 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே, பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் -கலெக்டர் அலுவலகம் எதிரே, பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதில், கரூரில் இருந்து வெள்ளியணை, பாளையம், திண்டுக்கல் பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
இந்நிலையில், பயணிகள் நிழற்கூட சுற்றுச்சுவர் சேதமடைந்தது. நிழற்கூடம் இல்லாத இடத்தில், பஸ்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் கடும் வெயிலில் அவதிப்படுகின்றனர். எனவே, கலெக்டர் அலுவலகம் எதிரே, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள, பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

