/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே சேதம் அடைந்த சிக்னல் கம்பம்: விபத்து ஏற்படும் அபாயம்
/
கரூர் அருகே சேதம் அடைந்த சிக்னல் கம்பம்: விபத்து ஏற்படும் அபாயம்
கரூர் அருகே சேதம் அடைந்த சிக்னல் கம்பம்: விபத்து ஏற்படும் அபாயம்
கரூர் அருகே சேதம் அடைந்த சிக்னல் கம்பம்: விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஏப் 20, 2025 01:48 AM
கரூர்:
கரூர் - திருச்சி சாலை, புலியூரில் தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் ஆலை உள்ளது. மேலும், அப்பகுதியில் உப்பிடமங்கலம் பிரிவு சாலை செல்கிறது.
அதில், போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்தை தடுக்கவும், சோலார் சிஸ்டம் உதவியுடன் தானியங்கி சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டது.
ஆனால், அந்த சிக்னல் விளக்கு கம்பம், பல மாதங்களாக சேதம் அடைந்துள்ளது. விளக்குகள் எரியவில்லை. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்யாமல் விட்டு விட்டனர்.
இதனால், கரூரில் திருச்சி செல்லும் வாகனங்கள், உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே, சேதம் அடைந்த சிக்னல் கம்பத்தை சரி செய்து, விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

