/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் குவிந்த டார்ஜிலிங் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை
/
கரூரில் குவிந்த டார்ஜிலிங் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை
கரூரில் குவிந்த டார்ஜிலிங் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை
கரூரில் குவிந்த டார்ஜிலிங் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை
ADDED : ஆக 05, 2025 12:55 AM
கரூர், வட மாநிலங்களில் இருந்து, ஆப்பிள் வரத்து கரூருக்கு வந்த வண்ணம் உள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் அதிகபட்சமாக, 150 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு காலத்தில் பணக்காரர்களின் பழம் என அழைக்கப்பட்ட ஆப்பிள், தற்போது இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆக., செப்., அக்., மாதங்களில் ஆப்பிள் பழத்துக்கு நல்ல சீசன் காலமாகும். தமிழகத்தில் மலைப்பகுதியில் மட்டும், ஆப்பிள் குறைந்தளவே சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தின் ஆப்பிள் தேவைக்கு, வட மாநிலங்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆப்பிள் பழத்துக்கு சீசன் இல்லாத காலங்களில் ஒரு கிலோ ஆப்பிள், 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வட மாநிலங்களில் கடந்த, 10 ஆண்டுகளாக ஆப்பிள் சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த ஒரு வாரமாக, தமிழகத்துக்கு வரும் ஆப்பிள் வரத்தும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மத்திய பிரதேசம், இமாச்சால பிரதேசம் பகுதிகளில் இருந்து டார்ஜிலிங் ஆப்பிள் வரத்து குவிய தொடங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன், பெரிய அளவிலான கடைகளில் மட்டும் விற்பனை
செய்யப்பட்ட ஆப்பிள் தற்போது, சாலையோரங்களில் விற்பனை செய்யப்படு
கிறது. குறைந்தபட்சமாக, 120 ரூபாயில் இருந்து, 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வைட்டமின், புரத
சத்துகள் அதிகம் உள்ள ஆப்பிள் பழத்தை, ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.