ADDED : நவ 09, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த நங்கவரம் தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 47, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் சுஷ்மிதா, 22, திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 5ம் தேதி வழக்கம் போல் காலையில், திருச்சிக்கு வேலைக்கு சென்றார். மாலையில் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

