ADDED : டிச 16, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த சின்னியம்பாளையம் பஞ்., காக்காயம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதிய-ழகன், 48, வெல்டிங் கூலி தொழிலாளி. இவரது மகள் முத்துலட்சுமி, 19, அரசு பாலிடெக்னிக் கல்-லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 13ம் தேதி இரவு 10:00 மணியளவில், பஞ்-சப்பட்டி ஐயப்பன் கோவிலுக்கு மதியழகன் தனது குடும்பத்தாருடன் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மகள் முத்துலட்சுமியை காண-வில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என, மதியழகன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

