ADDED : பிப் 15, 2026 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: மகள் மாயமானதாக நங்கவரம் போலீசில், தந்தை புகார் அளித்துள்ளார்.
குளித்தலை அடுத்த, நச்சலுார் கீழத்தெருவை சேர்ந்தவர் பெரிய-சாமி, 60, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரியதர்-ஷினி, 26. இவரது கணவர் மணிகண்டன். இவர்களுக்கு நிரஞ்சன், 7, சிவேந்திரன், 6, என்ற இரு மகன்கள் உள்ளனர்.
கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்-டதால், பிரியதர்ஷினி இரண்டு குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுக-ளுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.இந்நிலையில் கடந்த, 11ம் தேதி மதியம், 2:00 மணியளவில் வீட்டிலிருந்த பிரியதர்ஷினியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.

