ADDED : மே 16, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 44. இவரது மகள் கார்னியா, 19, தரகம்பட்டியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 13ம் தேதி கல்லுாரியில் தேர்வு எழுதி விட்டு, மாலை 5:00 மணியாகியும் வரவில்லை. தனது மகளை காணவில்லை என, முருகேசன் கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
