ADDED : டிச 08, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்: தாய் புகார்
குளித்தலை, டிச. 8-
குளித்தலை அடுத்த, மேலப்பகுதி பஞ்., வடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 50; கூலித்தொழிலாளி, இவரது மகள் கனகவள்ளி, 19. நேற்று முன் தினம் இரவு இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து பார்த்தபோது, மகள் கனகவள்ளியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை எனதாய் கொடுத்த புகாரின் படி சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.