ADDED : ஆக 29, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, மைலம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளியின், 16 வயது மகள் ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 25ம் தேதி காலை 9:00 மணியளவில் வழக்கம் போல் வேலைக்கு சென்றவர், மீண்டும் இரவு வீட்டுக்கு வரவில்லை.
பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

