ADDED : அக் 09, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி, 40. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் துளசி, 20, திருச்சியில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 5ம் தேதி காலை 8:00 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர், பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.