ADDED : செப் 15, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:தமிழ்நாடு காதுகேளாதவர், வாய் பேசாதோர் சங்கம், கரூர் மாவட்ட கிளை மாநாடு, மாவட்ட தலைவர் கவின் தலைமையில், சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், அரசு வேலைகளில் காது கேளாதவர், வாய் பேசாதோர்களுக்கு, ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து அரசு அலுவலகங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில், சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும்; மாற்றுத்
திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், மாநில தலைவர் சொர்ணவேல், மாவட்ட செயலாளர் அரவிந்த், பொருளாளர் பார்த்திபன், மாவட்ட மா.கம்யூ., செயலாளர் ஜோதிபாசு, செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.