/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழிமலை கோவில் முருகனுக்கு அலங்காரம்
/
புகழிமலை கோவில் முருகனுக்கு அலங்காரம்
ADDED : டிச 26, 2025 05:24 AM
கரூர்: புகழிமலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்-தனம்,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்-களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பாலசுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்-வங்களை தரிசனம் செய்தனர்.
* புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரம-ணியர் கோவில், நன்செய்புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரம-ணியர் கோவில், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

