sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகள் இடிக்கும் பணி துவக்கம்

/

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகள் இடிக்கும் பணி துவக்கம்

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகள் இடிக்கும் பணி துவக்கம்

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகள் இடிக்கும் பணி துவக்கம்


ADDED : டிச 22, 2024 01:40 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு

வீடுகள் இடிக்கும் பணி துவக்கம்

கரூர், டிச. 22-

கரூர், காந்திகிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் சேதமடைந்த வீடுகளை இடிக்கும் பணி துவங்கியது.

கரூர், தெற்கு காந்திகிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட வீடுகளில், அரசு அலுவலர்கள் குடியிருந்து வருகின்றனர். போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

குடியிருப்புகளில் உள்ள சுற்றுச்சுவர்கள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. பால்கனி சுவர்கள் இடிந்து விழுந்தபடி உள்ளன. ஒவ்வொரு வீட்டின் மேல்புறம் உள்ள கான்கிரீட் சுவர்கள், காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. தண்ணீர் பிடிக்கும் இடம், வாகனம் நிறுத்தும் இடங்களில் போதுமான மின் விளக்குகள் இல்லை. மின் மீட்டர் பெட்டிகள் சேதமடைந்துள்ளன. மாடியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் மூடி உடைந்த நிலையில் காணப்படுகிறது என, பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

இந்நிலையில், முற்றிலும் சேதமடைந்துள்ள வீட்டு வசதி வாரிய வீடுகளை, இடிக்கும் பணி நேற்று துவங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலம், இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us