/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மதர்ஷா பாபு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், வக்பு வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடி-யாக திரும்ப பெற வேண்டும், வக்பு வாரிய உறுப்பினர்களாக முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட, பல்-வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் அப்துல் முஹ்ஸின், ஊடக பொறுப்பாளர் ஜாகீர் உசேன் உள்பட, 100 க்கும் மேற்பட்-டவர்கள் பங்கேற்றனர்.