ADDED : டிச 13, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட பா.ம.க., (ராமதாஸ்) சார்பில், மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, வன்னியர் சங்க தலைவர் பிரபு, செயலாளர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

