/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 29, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், பயணியர் விடுதி முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், திருப்பத்துார் போலீஸ் ஸ்டேஷனில் அரசு அலுவலர்களை தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். டவுன் பஞ்., செயலாளர் தனுஷ்கோடி மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில செயலாளர் விஜய குமார், மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.