/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.7.49 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
/
ரூ.7.49 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
ADDED : ஜன 05, 2026 07:35 AM
கரூர்: கரூர் மாநகராட்சி வார்டுகளில், எம்.எல்.ஏ., செந்-தில்பாலாஜி, 7.49 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பணிகளுக்கு பூமி பூஜை, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.
அதில், கரூர் வேலுசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 10 லட்சம் ரூபாயில் பராம-ரிப்பு பணி, என்.எஸ்.பி., நகரில், 10.80 லட்சம் ரூபாயில், மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கு பணி, பெரியகுளத்துபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 47 லட்சம் ரூபாயில் பராமரிப்பு பணி, சர்ச் கார்-னரில், 16 லட்சம் ரூபாயில் புதிய நிழற்கூடம் அமைக்கும் பணி, மேலமாயனுார் நீரேற்று நிலையத்தில், 74 லட்சம் ரூபாயில் நீர்மூழ்கி பம்பு செட் உள்பட மின் உபகரணங்கள் சோதனை செய்து இயங்கும் பணி, சணப்பிரட்டியில், 45 லட்சம் ரூபாயில், குழாய் அமைக்கும் பணி உள்-பட பல்வேறு பணிகளை தொடங்கியும், முடி-வுற்ற பணிகளை திறந்தும் வைக்கிறார்.

