sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்

/

வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்

வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்

வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்


ADDED : மே 09, 2025 02:00 AM

Google News

ADDED : மே 09, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, மே 9

குளித்தலை அடுத்த, பண்ணப்பட்டி மற்றும் தென்னிலையில், முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கடவூர் யூனியன் ஆணையர்கள் முத்துக்குமார், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி பங்கேற்று, பண்ணப்பட்டி பஞ்., உடையாட்டியில், 15வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ், மூன்று லட்சத்து, 45 ஆயிரம் மதிப்பில் நடந்து முடிந்த சிறிய சமுதாய சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

இதேபோல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், சுக்காம்பட்டி 3வது தெருவில், ரூ. 9.21 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்தல், கோவில்பட்டியில், தலா ரூ.17 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் சமத்துவ மயானம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டடம், உடையாபட்டியில், ரூ. 9.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்தல் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதேபோல், தென்னிலை பஞ்., மஞ்சபுளிப்பட்டி முத்தாலம்மன் கோவில் அருகில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பில் புதிய நாடகமேடை அரங்கத்தை திறந்து வைத்தார்.

தி.மு.க., நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us