/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : ஜூன் 07, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், நொய்யல் அருகே, கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், வைகாசி மாத ஏகாதசியையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.
கரூர் மாவட்டம், நொய்யல் கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், வைகாசி மாத ஏகாதசியையொட்டி நேற்று காலை மூலவருக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பிறகு, ஸ்ரீதேவி பூதேவி உடனான மூலவர் சீனிவாச பெருமாள் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.