ADDED : மே 19, 2026 01:47 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு,
நேற்று முன்தினம் அம்மன் திருத்தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி
நடந்தது. தொடர்ந்து நேற்று காலை முதல் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில்
இருந்து, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்துல், அலகு குத்துதல் ஆகிய
நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
