/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பண்டரிநாதன் கோவில் கருவறைக்குள் சென்று சுவாமியை வணங்கிய பக்தர்கள்
/
பண்டரிநாதன் கோவில் கருவறைக்குள் சென்று சுவாமியை வணங்கிய பக்தர்கள்
பண்டரிநாதன் கோவில் கருவறைக்குள் சென்று சுவாமியை வணங்கிய பக்தர்கள்
பண்டரிநாதன் கோவில் கருவறைக்குள் சென்று சுவாமியை வணங்கிய பக்தர்கள்
ADDED : ஜூலை 07, 2025 04:04 AM
கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், ஆஷாட ஏகாதசி திருவிழாவை-யொட்டி, பக்தர்கள் நேற்று கருவறைக்குள் சென்று வணங்கினர்.
கரூர், ஜவஹர் பஜார் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, துக்காரம் கொடியேற்றம் மற்றும் லட்சார்ச்சனையுடன் ஏகாதசி திருவிழா துவங்கியது. நேற்று அதிகாலை, பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபி-ஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, ஏராள-மான பக்தர்கள் கருவறைக்குள் சென்று, மூலவர் சுவாமியை தொட்டு வணங்கினர். அவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின், சுவாமி நகர்வீதி புறப்பாடு, திவ்ய நாம சங்கீர்த்தனத்துடன் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு பண்டரிநாதன் சுவா-மிக்கு, காவிரியாற்றில் தீர்த்தவாரியும்,  மாலை, 6:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராத-னையும் நடக்கிறது.

