sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புலியூர் டவுன் பஞ்., ரேஷன் கடைகளில் 5 மாதமாகியும் வேட்டி, சேலை கிடைக்கல

/

புலியூர் டவுன் பஞ்., ரேஷன் கடைகளில் 5 மாதமாகியும் வேட்டி, சேலை கிடைக்கல

புலியூர் டவுன் பஞ்., ரேஷன் கடைகளில் 5 மாதமாகியும் வேட்டி, சேலை கிடைக்கல

புலியூர் டவுன் பஞ்., ரேஷன் கடைகளில் 5 மாதமாகியும் வேட்டி, சேலை கிடைக்கல


ADDED : மே 25, 2025 01:11 AM

Google News

ADDED : மே 25, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :புலியூர் டவுன் பஞ்.,ல், உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் முடிந்து, ஐந்து மாதங்களை கடந்தும் வேட்டி, சேலை முறையாக வழங்கவில்லை.

தமிழக அரசால், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்

களுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில், கரூர் மாவட்டம் புலியூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில், 1,600க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இன்னும், பெரும்பாலான கிராமங்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இது குறித்து, புலியூர் டவுன் பஞ்., 4வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் கூறியதாவது: புலியூர் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பான முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பல இடங்களில் வேட்டி, சேலை முறையாக வழங்கப்படவில்லை. பெரும்பாலான கடைகளில் குறைந்த அளவிலேயே வேட்டி, சேலை வந்தது. சில கடைகளில் வேட்டி மட்டும், சில கடைகளில் சேலை மட்டும், சில கடைகளில் இரண்டுமே

வழங்கவில்லை. இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டால், ஏதாவது பதில் சொல்லி சமாளித்து வருகின்றனர். ஐந்து மாதங்கள் முடிந்த நிலையிலும், தகுதியான கார்டுதாரர்களுக்கு முழுமையாக வேட்டி, சேலை வழங்கப்

படவில்லை.

இவ்வாறு கூறினார்.

இது குறித்து, கரூர் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ''மாவட்டத்தில், 70 சதவீதம் வேட்டி சேலை வந்தது. புலியூர் பகுதியில் வேட்டி, சேலை வழங்கவில்லை என்ற புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us