ADDED : டிச 31, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்: நம்பியூர் அருகே புது சூரிபாளையத்தை சேர்ந்த தேவராஜ் மகன் கார்த்திக், 29; பனியன் கம்பெனி தொழிலாளி. காது கேட்காத மாற்றுத்திறனாளி.
தந்தை இறந்து விட்ட நிலையில் தாய் ஈஸ்வரி-யுடன் வசித்தார். நேற்று முன்தினம் சகோதரி வீட்டுக்கு தாயுடன் சென்றுள்ளார்.
ஈஸ்வரி அங்கேயே இரவு தங்கி விட்ட நிலையில் கார்த்திக் வீட்டுக்கு வந்துள்ளார்.நேற்று காலை வீட்டுக்கதவு திறந்தபடி இருந்-தது. அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது, வரண்டாவில் இரும்பு ஆங்கிளில் துாக்கில் சடலமாக கார்த்திக் தொங்கினார்.
அவர் சாவுக்கான காரணம் குறித்து, நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

