sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சென்னைக்கு பகல் நேர ரயில் இல்லை பட்ஜெட்டில் அறிவிக்காததால் ஏமாற்றம்

/

சென்னைக்கு பகல் நேர ரயில் இல்லை பட்ஜெட்டில் அறிவிக்காததால் ஏமாற்றம்

சென்னைக்கு பகல் நேர ரயில் இல்லை பட்ஜெட்டில் அறிவிக்காததால் ஏமாற்றம்

சென்னைக்கு பகல் நேர ரயில் இல்லை பட்ஜெட்டில் அறிவிக்காததால் ஏமாற்றம்


ADDED : பிப் 04, 2025 06:10 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க, மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகாததால், கரூர் மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தென் மாவட்ட பகுதிகளான மதுரை, திருநெல்வேலி, ராமநாத-புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நுழைவு வாயிலான உள்ள கரூர் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் மற்றும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

மேலும், கரூரில் பஸ் பாடி கட்டும் தொழில், ஜவுளி தொழில் மற்றும் கொசு வலை உற்பத்தி தொழிலில்,

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் பல்வேறு தொழில் நிமித்தம்

காரணமாக, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதி-களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கரூர் வந்து

செல்கின்-றனர்.இந்நிலையில், கரூர் வழியாக இரவு நேரத்தில் சென்னை தாம்ப-ரத்துக்கு, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலும்,

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப் பட்டு வருகிறது.

ஆனால், கரூரில் இருந்து, பகல் நேரத்தில் சென்-னைக்கு ரயில்கள் இல்லை.இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள், பகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல சேலம் அல்லது

ஈரோடு அல்லது திருச்சி போக வேண்டிய நிலை உள்ளது. இதனால், கரூரில் இருந்து சேலம் அல்லது திருச்சி

வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என, கரூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பல

ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்-றனர்.இந்நிலையில் கடந்த, 1ல் வெளியான மத்திய பட்ஜெட்டில் கரூரில் இருந்து, சென்னைக்கு பகல் நேர ரயில்

இயக்குப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, கரூர் மாவட்ட மக்கள் எதிர்-பார்த்திருந்தனர். ஆனால்

பட்ஜெட்டில், கரூர் - சென்னைக்கு பகல் நேர ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், கரூர்

மாவட்டத்தை சேர்ந்த மக்கள், பெரும் ஏமாற்றம் அடைந்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us