/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தம்பதியரிடையே தகராறு; மனைவி விபரீத முடிவு
/
தம்பதியரிடையே தகராறு; மனைவி விபரீத முடிவு
ADDED : செப் 30, 2024 06:35 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆதனுார் பஞ்., உப்பாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 23. வீரணம்பட்டியை சேர்ந்தவர் தனப்பிரியா, 23. இருவரும் காதலித்து, 2017 பிப்.,19ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன் பிரகாஷ் சொந்தமாக டாடா ஏசி சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவர்களுக்கு இடையே, அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அதிகாலை தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டது. கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு தனப்பிரியா வெளியே சென்ற போது, வெளியே மயங்கி விழுந்தார். அவர் குருணை மருந்தை குடித்தது தெரியவந்தது. அவரை மீட்டு குஜிலியம்பாறையில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தனப்பிரியாவின் தந்தை ஸ்ரீரங்கன் கொடுத்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.