/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., இளைஞர் அணி சார்பில் அன்னதானம் வழங்கல்
/
அ.தி.மு.க., இளைஞர் அணி சார்பில் அன்னதானம் வழங்கல்
ADDED : அக் 06, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாநகர தெற்கு பகுதி, அ.தி.மு.க., இளைஞர் அணி சார்பில், புரட்டாசி திருவிழாவையொட்டி, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் அருகே, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், தெற்கு பகுதி செயலாளர் ஜெயராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் கரிகாலன் உள்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.