sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு பணி பணியாளர்களுக்கு 'டேப்' வழங்கல்

/

மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு பணி பணியாளர்களுக்கு 'டேப்' வழங்கல்

மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு பணி பணியாளர்களுக்கு 'டேப்' வழங்கல்

மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு பணி பணியாளர்களுக்கு 'டேப்' வழங்கல்


ADDED : ஜூலை 29, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு, 14 டேப்களை, கலெக்டர் வழங்கினார்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.

இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைபட்டா, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு, 464 மனுக்கள் வரப்பெற்றன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதொலி கருவி, செயற்கை கால் என, 10 பயனாளிகளுக்கு, 93,165 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 8 வட்டாரங்கள், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., பகுதிகளுக்கு வீடு, வீடாக சென்று தரவுகள் சேகரிப்பதற்காக, 14 கையடக்க மடிக்கணினி களை (டேப்) கலெக்டர்

தங்கவேல் வழங்கினார்.

டி.ஆர்.ஓ.,கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, ஆர்.டி.ஓ.,முகமது பைசல், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us