ADDED : ஜூலை 15, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்சப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, பாப்பகாப்பட்டி, சேங்கல், புனவாசிப்-பட்டி, மகிளிப்பட்டி, மேட்டுப்பட்டி, சந்தியமங்கலம், வயலுார், சரவணபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், நாட்டுக்கோழிகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.
வளர்ந்த கோழிகளை, அருகில் உள்ள சந்தையூர், சேங்கல், உப்பிடமங்களம் ஆகிய பகு-திகளில் செயல்படும் வாரச்சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். சில வாரங்களாக நாட்டுக்கோழி வளர்ப்பு சரிவால், விற்ப-னைக்கு குறைவான கோழிகளையே விவசாயிகள் கொண்டு வந்-தனர். இதனால், கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ, 480 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 530 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடைகளில், கிலோ, 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.