/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழாய் வால்வில் வெளியேறும் குடிநீர்
/
குழாய் வால்வில் வெளியேறும் குடிநீர்
ADDED : செப் 29, 2024 03:29 AM
கரூர்: கரூர் அருகே குடிநீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள வால்வில் இருந்து, குடிநீர் வெளியேறி வருகிறது. அதில் பைப் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், நெரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வரு-கிறது. இந்நிலையில், நெரூர் அக்ரஹாரம் அருகே, குடிநீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள வால்வில் இருந்து குடிநீர் வெளி-யேறி வருகிறது.
இதை அப்பகுதி பொதுமக்கள், துணிகளை வைத்து வடிகட்டி பிடித்து செல்கின்றனர்.சில நேரங்களில் குடிநீர் வால்வில் இருந்து, விடிய விடிய குடிநீர் சாக்கடை கால்வாயில் செல்கிறது. இதனால், வால்வை சீர-மைக்ககோரி பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் பய-னில்லை. எனவே, வால்வில் இருந்து வெளியேறும் குடிநீர் வீணாவதை தடுக்க, பைப் அமைத்தால், தண்ணீர் பிடிக்க வசதி-யாக இருக்கும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.