ADDED : பிப் 21, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர், சத்தியமூர்த்தி நகர் பிரிவு சாலையில், வடிகால் கால்வாய் பாலம் கட்டப்பட்ட நிலையில், இணைப்பு சாலை இல்லாததால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.தான்தோன்றிமலை அரசு கல்லுாரி அருகில், சத்தியமூர்த்தி நகர் பிரிவு சாலையில், மழைநீர் வடிகால் கால்வாய் பாலம் சில மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த வழியாக போக்குவரத்து நடக்கிறது. பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை.
இதனால், வாகன ஓட்டிகள் புதிய பாலத்தின் மேல் பகுதியில் செல்ல முடியாமல் அவதிப்படு-கின்றனர். அப்பகுதியில் தார்ச்சாலைகளும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமா-றுகின்றனர். எனவே, புதிய பாலத்தையொட்டி, உடனடியாக இணைப்பு சாலை அமைக்க வேண்டியது அவசியம்.
