sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மோகனுார் சாலையில் குப்பைக்கு தீ வைப்பதால் ஓட்டுனர்கள் அவதி

/

மோகனுார் சாலையில் குப்பைக்கு தீ வைப்பதால் ஓட்டுனர்கள் அவதி

மோகனுார் சாலையில் குப்பைக்கு தீ வைப்பதால் ஓட்டுனர்கள் அவதி

மோகனுார் சாலையில் குப்பைக்கு தீ வைப்பதால் ஓட்டுனர்கள் அவதி


ADDED : டிச 13, 2025 05:11 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மோகனுார் சாலையில், குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

கரூர்-நாமக்கல் மாவட்டம் மோகனுார் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. அதை, மாநகராட்சி நிர்வாகம் நாள்தோறும் அகற்றுவது இல்லை. இதனால், அந்த பகுதியில் குப்பை சேர்ந்தவுடன் குவிக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதில், தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களும் எரிவதால், துர்நாற்றமும், பெரும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இது குறித்து பொது மக்கள் புகார் தெரிவித்தும், கரூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று மோகனுார் சாலையில் இருந்த குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். எனவே, கரூர்-மோகனுார் சாலையில் குப்பைகளை, தீ வைத்து கொளுத்துவதை தடுக்க, கரூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us