/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோகனுார் சாலையில் குப்பைக்கு தீ வைப்பதால் ஓட்டுனர்கள் அவதி
/
மோகனுார் சாலையில் குப்பைக்கு தீ வைப்பதால் ஓட்டுனர்கள் அவதி
மோகனுார் சாலையில் குப்பைக்கு தீ வைப்பதால் ஓட்டுனர்கள் அவதி
மோகனுார் சாலையில் குப்பைக்கு தீ வைப்பதால் ஓட்டுனர்கள் அவதி
ADDED : டிச 13, 2025 05:11 AM
கரூர்: கரூர் அருகே, மோகனுார் சாலையில், குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கரூர்-நாமக்கல் மாவட்டம் மோகனுார் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. அதை, மாநகராட்சி நிர்வாகம் நாள்தோறும் அகற்றுவது இல்லை. இதனால், அந்த பகுதியில் குப்பை சேர்ந்தவுடன் குவிக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதில், தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களும் எரிவதால், துர்நாற்றமும், பெரும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இது குறித்து பொது மக்கள் புகார் தெரிவித்தும், கரூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மோகனுார் சாலையில் இருந்த குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். எனவே, கரூர்-மோகனுார் சாலையில் குப்பைகளை, தீ வைத்து கொளுத்துவதை தடுக்க, கரூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

