sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உயர்மட்ட பாலத்தில் எரியாத விளக்குகளால் ஓட்டுனர்கள் அவதி

/

உயர்மட்ட பாலத்தில் எரியாத விளக்குகளால் ஓட்டுனர்கள் அவதி

உயர்மட்ட பாலத்தில் எரியாத விளக்குகளால் ஓட்டுனர்கள் அவதி

உயர்மட்ட பாலத்தில் எரியாத விளக்குகளால் ஓட்டுனர்கள் அவதி


ADDED : நவ 02, 2025 01:18 AM

Google News

ADDED : நவ 02, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே வெங்ககல்பட்டி உயர்மட்ட பாலத்தின், இணைப்பு சாலைகளில், உயர் மட்ட மின் கம்பத்தில் உள்ள விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது.

கரூர் - திண்டுக்கல் பழையசாலை, வெங்ககல்பட்டியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, சில ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அதன் வழியாக, வெள்ளியணை, குஜிலியம்பாறை, பாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.

அதை தவிர வெள்ளியணை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேலைக்காகவும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லுாரிகளுக்காகவும், உயர்மட்ட பாலம் வழியாக கரூர் நகருக்கு செல்கின்றனர். 2020ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, உயர்மட்ட பாலத்தில், சர்வீஸ் சாலையின் இரண்டு பக்கமும், நடுப்பகுதியில் உயர் மட்ட மின் கம்பத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது, பெரும்பாலான விளக்குகள் எரிவது இல்லை.

இதனால், வெங்ககல்பட்டி பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பாலத்தின் சர்வீஸ் சாலையில் உள்ள, அனைத்து உயர்மட்ட மின் கம்பத்தில் உள்ள விளக்குகளையும் எரிய, வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us