sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விவசாய பணிக்கு வாடகையில் ட்ரோன்கள்: கலெக்டர் தகவல்

/

விவசாய பணிக்கு வாடகையில் ட்ரோன்கள்: கலெக்டர் தகவல்

விவசாய பணிக்கு வாடகையில் ட்ரோன்கள்: கலெக்டர் தகவல்

விவசாய பணிக்கு வாடகையில் ட்ரோன்கள்: கலெக்டர் தகவல்


ADDED : அக் 26, 2024 06:28 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''கரூர் மாவட்டத்தில், விவசாய பயன்பாடுக-ளுக்கு ட்ரோன்கள் குறைந்த வாடகையில் தரப்ப-டுகிறது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரி-வித்தார்.

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்-தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்-பப்பட்ட, பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.

பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில் அதாவது, 4,869 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடிக்காக, 29.900 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறுதானிய விதைகள், 12.875 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. எண்ணை வித்-துக்கள், 4.970 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.

கரூர் மாவட்டத்தில் இயல்பான மழையளவு, 652.20 மி.மீ., நடப்பாண்டு அக்டோபர் வரை, 532.79 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும் நடப்பு மாதம் வரை, 18.675 ெஹக்டேர் பரப்பளவில், வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்-கைகளுக்கு, 10 முதல், 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பதில் அளிக்க அதிகாரிகள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு நச்சலுார், சிந்த-லவாடி, கள்ளை ஆகிய மூன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம், விவசாய பயன்பாட்டுக்கு குறைந்த வாடகையில், ட்ரோன்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், உதவி கலெக்டர் சுவாதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கால்நடை பராம-ரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, ஆர்.டி.ஓ., முகமது பைசல், கருணாகரன் உள்பட, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us