/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுப விசேஷம் இல்லாததால் முருங்கைக்காய் விலை சரிந்தது
/
சுப விசேஷம் இல்லாததால் முருங்கைக்காய் விலை சரிந்தது
சுப விசேஷம் இல்லாததால் முருங்கைக்காய் விலை சரிந்தது
சுப விசேஷம் இல்லாததால் முருங்கைக்காய் விலை சரிந்தது
ADDED : ஜூலை 28, 2025 08:04 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி வட்டா-ரத்தில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. கடந்தாண்டு இறுதியில், வடகிழக்கு பருவமழை கரூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவில் பெய்ததால், மானாவரி நிலங்களில் முருங்கை சாகுபடியை விவசாயிகள் துவக்கினர். வழக்கமாக ஆண்டுதோறும், ஜூன் முதல் நவ., மாதம், முருங்கைக்காய்க்கு சீசன் காலமாகும். இதனால், கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய பகுதிகளில் உள்ள, மார்க்கெட்டுக்கு முருங்-கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், முருங்கைக்காய் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதுகுறித்து, முருங்கை வியாபாரிகள் கூறிய-தாவது:அரவக்குறிச்சி வட்டாரத்தில், செடி முருங்கை, மர முருங்கை மற்றும் கொடி முருங்கை என மூன்று வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்-போது, சீசன் காலத்தையொட்டி முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. செடி முருங்கை, கொடி முருங்கை இரண்டு அடி முதல், மூன்று அடி வரை வளரும். இந்த ரகங்கள் கடந்த, மே மாதம், ஒரு கிலோ கொண்ட, ஒரு கட்டு முருங்-கைக்காய், 70 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை விற்றது.ஆனால், தற்போது செடி முருங்கைக்காய் ரகம் ஒரு கிலோ கட்டு, 25 ரூபாய்க்கும், கொடி முருங்-கைக்காய் ஒரு கிலோ, 20 ரூபாய்க்கும் விற்கிறது. மேலும், ஆடி மாதம் துவங்கி நிலையில் சுப விசேஷம் குறைவாக இருக்கும். இந்நிலையில், வரத்து அதிகரிப்பாலும், சுப விசேஷங்கள் இல்-லாததாலும், முருங்கைக்காய்க்கு மேலும் விலை குறைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.