/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆவணி மாதம் நிறைவால் வெற்றிலை விலை குறைந்தது
/
ஆவணி மாதம் நிறைவால் வெற்றிலை விலை குறைந்தது
ADDED : செப் 21, 2024 02:53 AM
கரூர்: ஆவணி மாதம், நிறைவு பெற்றதால் வெற்றிலை விலை குறைந்-துள்ளது.கரூர் மாவட்டத்தில், புகழூர், சேமங்கி, முத்தனுார், புங்கோடை, கோம்புபாளையம், பாலத்துறை, திருகாடுதுறை, லாலாப்பேட்டை, கருப்பத்துார், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட, பகுதிகளில், 2,500 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்-யப்படு கிறது.
கரூர் மாவட்டத்தில் இருந்து, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் வெற்றிலை அனுப்பி வைக்கப்ப டுகிறது.
சுப விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாள் ஆவணி மாதங்களில், அதிகளவில் நடக்கும். இதனால், இளம்பயிர் வெற்றிலை ஒரு மூட்டை
(100 கவுளி) கடந்த சில நாட்களாக, 6,000 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரை விற்றது. கடந்த, 17 ல் ஆவணி மாதம் நிறைவு பெற்றதால், வெற்றிலை விலை குறைய தொடங்கியது.இளம்பயிர் வெற்றிலை விலை, 5,000 ரூபாயாக குறைந்தது. முதிகால் வெற்றிலை ஒரு மூட்டை, 2,000 ரூபாய் வரை விற்றது.தற்போது, 1,000 ரூபாய் முதல், 1,500 ரூபாய் விலை குறைந்துள்-ளது.நடப்பு புரட்டாசி மாதத்தில் வரும் நாட்களில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் நவராத்திரி காரணமாக, வெற்றிலை விலை சற்று
உயரும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.