/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண்மங்கலம் அருகே இன்று கல்வி கடன் முகாம்
/
மண்மங்கலம் அருகே இன்று கல்வி கடன் முகாம்
ADDED : செப் 12, 2025 02:14 AM
கரூர், மண்மங்கலம் அருகே, பண்டுதகாரன் புதுார் தனியார் கல்லுாரியில் கல்வி கடன் முகாம், இன்று நடக்கிறது.
இது குறித்து, கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில் பண்டுதகாரன் புதுார் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் (தனியார்) கல்லுாரி வளாகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் இன்று (12ம் தேதி) காலை 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.
வித்யாலஷ்மி போர்டலில் கல்வி கடன் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், முகாம் அலுவலர்கள் மூலம் உடன் நிவர்த்தி செய்யப்படும். மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை இ.மெயில், வங்கி கணக்கு புத்தகம், வருமான சான்றிதழ், 10, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லுாரி கல்வி கட்டண பட்டியல் உள்பட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.