/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட 98 பேருக்கு கல்வி உதவித்தொகை
/
எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட 98 பேருக்கு கல்வி உதவித்தொகை
எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட 98 பேருக்கு கல்வி உதவித்தொகை
எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட 98 பேருக்கு கல்வி உதவித்தொகை
ADDED : டிச 05, 2024 07:46 AM
கரூர்: எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தாய், தந்தை இழந்தோர் ஆகிய, 98 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்ப-டுகிறது.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.பின், அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும், 16 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும்
பரிசோதனை மையங்களில் இலவச எச்.ஐ.வி., பரிசோ-தனை, 16 சுகவாழ்வு மையங்களில் பால்வினை நோய்
குறித்த பரி-சோதனை, உடனடி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி
மருத்துவமனையில், இலவச ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மையம் செயல்பட்டு வருகி-றது. இதில், 2,601 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அந்த நோயால் தாய், தந்தை
இழந்தோர் என பள்-ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்-தொகை வழங்கப்பட்டு
வருகிறது. 2023-2024ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை, 98 குழந்தைகளுக்கு, 2.94 லட்சம் ரூபாய்-
வழங்கப்பட்டுள்ளது. 2024-25ம் ஆண்டில், 139 குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. மேலும் சிகிச்சை எடுத்து வருவோருக்கு போக்குவரத்து வசதிக்கு ஏற்ற-வாறு, இணை ஏ.ஆர்.டி.
சிகிச்சை மையங்கள் குளித்தலை, வேலாயுதம்பாளையம், மையிலம்பட்டி, பள்ளப்பட்டி அரசு
மருத்-துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் லோகநாயகி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு
அலுவலர் சுமதி, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.